செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது புகார்

Published On 2017-02-24 17:41 GMT   |   Update On 2017-02-24 17:41 GMT
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள திருப்பாம்புறம் நெடுந்திடல் தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன் மனைவி கலைச்செல்வி (வயது 40). இவர் கடந்த 22-ந்தேதி இரவு சாலையில் நடந்து சென்ற போது திருப்பாம்புறம் வள்ளலார் கோவில் பத்து ராமையன் மகன் ராஜ்குமார் தவறான நோக்கத்தில் பேசியுள்ளார்.

பின்னர் கலைச்செல்வி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கும் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும் கலைச்செல்வியை அடித்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து கலைச்செல்வி பேரளம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ராஜ்குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News