செய்திகள்

திருபுவனை அருகே இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-02-20 10:34 GMT   |   Update On 2017-02-20 10:34 GMT
திருபுவனை அருகே கணவர் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

திருபுவனை அருகே திருபுவனை பாளையம் மதிநகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் வடமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது29) இவர்களுக்கு 5 வயதில் மகளும் உள்ளன.

இந்த நிலையில் சத்யாவை அவரது பெற்றோர் கோவில் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்யா தனது கணவரிடம் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் வெற்றிவேல் தனக்கு வேலை இருப்பதால் சத்யாவை மட்டும் கோவிலுக்கு செல்லும்படி கூறினார். இதனால் சத்யா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

நேற்று இரவு சத்யா தனது கணவர்-குழந்தையுடன் வீட்டில் அறையில் தூங்கினார். இன்று காலை வெற்றிவேல் எழுந்து பார்த்தபோது சத்யா ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News