செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் வி‌ஷம் குடித்த தாயிடம் பால் குடித்த குழந்தை பலி

Published On 2017-02-11 12:21 GMT   |   Update On 2017-02-11 12:21 GMT
உளுந்தூர்பேட்டையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்தார். அவரிடம் இருந்து பால் குடித்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை பாரிவள்ளல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவரது மனைவி உமா (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 9 மாதத்தில் நிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் உமா நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்தார். பின்னர் குழந்தைக்கு பால் கொடுத்தார். சிறிது நேரத்தில் உமா மயங்கி விழுந்தார். வி‌ஷம் குடித்த தாயிடம் பால் குடித்ததால் குழந்தையும் மயங்கியது.

அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

உமாவுக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உமா வயிற்று வலி காரணமாக அவதிபட்டு வந்ததாகவும், அதனால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றதும், உமா வி‌ஷம் குடித்து விட்டு குழந்தைக்கு பால் கொடுத்ததால் குழந்தை நிஷா பரிதாபமாக இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Similar News