செய்திகள்

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

Published On 2017-02-07 19:46 GMT   |   Update On 2017-02-07 19:46 GMT
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா மீதும் அவரது குடும்பத்தினர் மீது அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

பன்னீர் செல்வம் பேட்டியால தமிழக அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் தம்பிதுரை பேசியதாவது:-

இந்த நாடகத்தை பின்னால் நின்று திமுக நடத்தியுள்ளது. அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் பின்னால் இருந்து இதனை செய்துள்ளனர். தலைவராக இல்லாமல், செயல் தலைவராக இருப்பதால இதனை செய்து வருகிறார்.

134 எம்எல்ஏக்ககளும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும். மத்திய அரசை சேர்ந்த கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News