செய்திகள்

காசிமேடு மீனவர்கள் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-22 22:39 GMT   |   Update On 2017-01-22 22:39 GMT
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி காசிமேட்டில் உள்ள மீனவர்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.
ராயபுரம்:

சென்னை காசிமேட்டில் உள்ள தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று காசிமேட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி நாளை(அதாவது இன்று) காசிமேட்டில் உள்ள மீனவர்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.

மேலும், சிங்காரவேலரின் நினைவு நாள் மற்றும் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Similar News