செய்திகள்

தேனி அருகே பால்பண்ணை அதிபர் மீது கொலை வெறி தாக்குதல்

Published On 2017-01-21 10:10 GMT   |   Update On 2017-01-21 10:10 GMT
தேனி அருகே பால்பண்ணை அதிபர் மீது கொலை வெறி தாக்குதல் தேனி அருகே தகராறில் பால்பண்ணை அதிபர் தாக்கப்பட்டார்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி (வயது37). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மைத்துனர் மகேந்திரன். அதே பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகரன். இவரது பால்பண்ணையில் சின்னத்துரை வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பிரபாகரனிடம் கடையில் இருந்து விலகி மகேந்திரனுடன் வேலைக்கு சென்றார். இதனால் பிரபாகரனுக்கும் மகேந்திரனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

சங்கிலி தனது மைத்துனருக்கு ஆதரவாக இது குறித்து பிரபாகரனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் சங்கிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சங்கிலி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News