செய்திகள்
நன்னிலம் அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள அச்சுதமங்கலம் ஜன்னத்து நகரைச் சேர்ந்தவர் சாகுல் (வயது 30). இவர் தனது தாயார் பரகத் (எ) பரகத்நிஷாவுடன் மோட்டார் சைக்கிளில் அச்சுமங்கலத்தில் இருந்து நன்னிலம் நோக்கி சென்றார். சிகார்பாளையம்மெயின் ரோட்டில் திரும்பும் போது பரகத்நிஷா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.