செய்திகள்

டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பா.ஜனதா மீது புகார்

Published On 2017-01-06 09:27 GMT   |   Update On 2017-01-06 09:27 GMT
மகளிர் காங்கிரஸ் நிர்வாகியான ஜோதி மணி, என்னைப்பற்றி அவதூறு பரப்பிய பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:

மகளிர் காங்கிரஸ் நிர்வாகியான ஜோதி மணி பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பப்பட்டது. இது பற்றி பா.ஜனதா கட்சியினர் மீது அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில் ஜோதிமணி, டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் என்னைப்பற்றி அவதூறு பரப்பிய பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக ஜோதிமணிக்கு மிரட்டல்களும் வந்தன. இது பற்றி கூறிய அவர், என்னை மிரட்டியவரின் குரல் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசையின் குரலை போல இருந்தது என்று தெரிவித்தார்.

Similar News