செய்திகள்

சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

Published On 2016-12-28 09:59 GMT   |   Update On 2016-12-28 09:59 GMT
சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி:

சமயநல்லூர் அருகே உள்ள திருவாலவாய நல்லூரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 34), விவசாயி. இவர் சம்பவத்தன்று ஊரிலிருந்து மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மதுரைஅழகர்கோவில் ரோட்டில் குடியிருந்து வரும் செல்வராஜ் ஜோசப் மகன் ஜேம்ஸ் ஆபிரகாம் (வயது19)என்பவர் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சமயநல்லூர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது நேருக்குநேராக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் நாகூர்மீரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News