செய்திகள்

கும்பகோணம் அருகே விவசாயியை மிரட்டி பணம் பறிப்பு

Published On 2016-12-26 11:17 GMT   |   Update On 2016-12-26 11:17 GMT
கும்பகோணம் அருகே விவசாயியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரையன் (வயது 47). விவசாயி.

இவர் கடந்த 23-ந்தேதி பட்டீஸ்வரம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேலகொற்கை மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன்(35) என்பவர் வீரையனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தன சேகரன், வீரையன் சைக்கிளை உடைத்து அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.1000 பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரையன் கொடுத்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன சேகரனை கைது செய்தனர்.

Similar News