செய்திகள்
பாளை அருகே மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பவம் பற்றி சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது45). கூலி தொழிலாளி. இவரது மகன் மகாராஜன்(23). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் பாளையங்கோட்டை வந்தனர்.
பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது.
இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது45). கூலி தொழிலாளி. இவரது மகன் மகாராஜன்(23). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் பாளையங்கோட்டை வந்தனர்.
பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது.
இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.