செய்திகள்
ஜெயலலிதா உடலுக்கு வைகோ - பழ.நெடுமாறன் அஞ்சலி
சென்னை ராஜாஜி அரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின்னர் வைகோ பேசியபோது, “எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்து நிர்மாணித்த ஈடு இணையற்ற ஆற்றல்மிக்க தலைவராக திழ்ந்த அன்புச் சகோதரி ஜெயலலிதா மறைவு கோடானுகோடி தமிழர்ளை துயர வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. லட்சோபலட்சம் அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் இடி விழுந்ததுபோல் கலங்கித் தவிக்கிறார்கள். பிள்ளைகளை இழந்த தாய் கதறுவதுபோல் பெண்கள் கதறித் துடிக்கிறார்கள்.
முதலமைச்சராக அவர் சாதிததது அதிகம். காவேரி நதிநீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, பென்னிக் குவிக் அணை விவகாரங்களில் தமிழகத்தின் மூலம் சட்டத்தின் மூலம் உரிமை போராட்டங்களை நடத்தியவர். சுதந்திர தமிழ் ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்’’ என்று புகழாரம் சூட்டினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்றும் சற்று நேரத்தில் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின்னர் வைகோ பேசியபோது, “எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்து நிர்மாணித்த ஈடு இணையற்ற ஆற்றல்மிக்க தலைவராக திழ்ந்த அன்புச் சகோதரி ஜெயலலிதா மறைவு கோடானுகோடி தமிழர்ளை துயர வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. லட்சோபலட்சம் அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் இடி விழுந்ததுபோல் கலங்கித் தவிக்கிறார்கள். பிள்ளைகளை இழந்த தாய் கதறுவதுபோல் பெண்கள் கதறித் துடிக்கிறார்கள்.
முதலமைச்சராக அவர் சாதிததது அதிகம். காவேரி நதிநீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, பென்னிக் குவிக் அணை விவகாரங்களில் தமிழகத்தின் மூலம் சட்டத்தின் மூலம் உரிமை போராட்டங்களை நடத்தியவர். சுதந்திர தமிழ் ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்’’ என்று புகழாரம் சூட்டினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்றும் சற்று நேரத்தில் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.