செய்திகள்

ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் அஞ்சலி

Published On 2016-12-06 10:20 GMT   |   Update On 2016-12-06 10:20 GMT
மறைந்த ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று பிற்பகல் சென்னை வந்த முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த பெண்மணி என்று ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய தேவகவுடா, ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்றும் சற்று நேரத்தில் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Similar News