செய்திகள்
ஜெயலலிதா மறைவு: தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் அரசு தரப்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி அலுவலகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழ்ந்த ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து, இன்று மாலையே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் அரசு தரப்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி அலுவலகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழ்ந்த ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து, இன்று மாலையே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.