செய்திகள்

மூளைச்சாவு அடைந்தாலும் நான்கு பேரை வாழவைத்த மனிதர்

Published On 2016-12-02 13:10 GMT   |   Update On 2016-12-02 13:23 GMT
மூளைச்சாவு அடைந்த மனிதரின் உடல் உறுப்பு தானத்தால் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோயம்புத்தூர்:

கோவையை சேர்ந்த மில்டன் ஆனந்த்(44) உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த நவம்பர் 27-ம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு ஆனந்த்
மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆனந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

குடும்பத்தினரின் விருப்பத்தைத் தொடர்ந்து ஆனந்தின் கல்லீரல், இரண்டு கண்கள் மற்றும் தோல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் இன்று அகற்றினர்.

பின்னர் கேஎம்சிஹெச் மருத்துவமனையை சேர்ந்த நோயாளி ஒருவருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. கண்கள், தோல் ஆகியவை பிற தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Similar News