செய்திகள்
ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: 4 பேர் கைது
ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு கிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை கடந்த ஒரு மாதமாக ஏற்காடு போலீசார் கைது செய்து வந்தனர்.
நேற்று ஏற்காட்டில் நடைபெற்ற சாராய சோதனையில் கொளகூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 44), முருகன் (42), தாலூர்காடு பகுதியை சேர்ந்த சின்னாக்கவுண்டர் (36), பழனி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.