செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே சுழலில் சிக்கிய விவசாயி பலி

Published On 2016-11-02 12:02 GMT   |   Update On 2016-11-02 12:03 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே சுழலில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவெண்ணைநல்லூர்:

திருவெணணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷாமான் (வயது 45) விவசாயி.

பெண்ணையாற்று பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த அவருக்கு தாகம் எடுத்தது.

எனவே பெண்ணையாற்றில் தண்ணீர் குடிக்க இறங்கிய அவர் ஆற்றுச் சுழலில் சிக்கி மூழ்கினார்.

சிறிது நேரத்தில் அவரது உடல் தண்ணீரில் மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் அங்கு வந்து ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஷாமானின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News