செய்திகள்

திருத்தணியில் செல்போன் கடையில் தீ விபத்து

Published On 2016-11-02 07:14 GMT   |   Update On 2016-11-02 07:14 GMT
திருத்தணியில் செல்போன் கடையில் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருத்தணி:

திருத்தணி அரக்கோணம் சாலையில் தனியார் செல்போன் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டிச் சென்றனர்.

இரவு 10 மணி அளவில் பூட்டிய கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகில் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News