செய்திகள்

சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Published On 2016-11-02 02:04 GMT   |   Update On 2016-11-02 02:04 GMT
சமூக நலத்துறைக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை 2012-2013 வருடம் நடத்தியது. அந்த தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களில் அதிக மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 66 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அவர்களின் பெயர்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக நலத்துறை நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவார்கள்.

Similar News