செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ஆளவந்தார் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 1–7–2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். 1–1–2016 முதல் 20 சதவித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் உள்பட அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 1–7–2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். 1–1–2016 முதல் 20 சதவித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் உள்பட அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.