செய்திகள்

தீபாவளிக்கு துணி எடுப்பதில் குடும்பத்தகராறு: இளம்பெண் தீ குளிப்பு

Published On 2016-10-26 13:33 GMT   |   Update On 2016-10-26 13:33 GMT
கோவை கவுண்டம்பாளையத்தில் தீபாவளிக்கு துணி எடுப்பதில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்தார்.

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கார் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைகளின் டியூசன் பீஸ் மற்றும் தீபாவளிக்கு துணி எடுப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மணிகண்டன் வெளியே சென்று விட்டார்.

வீட்டில் தனியே இருந்த மகேஸ்வரி மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ வைத்து மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் மகேஸ்வரி அலறி சத்தம்போட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மகேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News