செய்திகள்
விருதுநகர் அருகே ரெயில் மோதி பெண் பலி
விருதுநகர் அருகே ரெயில் மோதி பெண் இறந்து கிடந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர்-கள்ளிக்குடி இடையே உள்ள வெள்ளா குளம் ரெயில் தண்டவாளத் தில் உடல் நசுங்கி நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? கொலை செய்யப் பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண் டாரா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.