செய்திகள்
மகுடஞ்சாவடி அருகே பிளஸ்-1 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது வழக்கு
மகுடஞ்சாவடி அருகே பிளஸ்-1 மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ளது நல்லனம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் போதும் நல்லனம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்து தெரிவித்து வந்தார்.
ஆனாலும் பாலமுருகன் விடாமல் பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். இதனாம் மனம் உடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பாலமுருகன் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டதுடன் அவரை கண்டித்தனர். அப்போது பாலமுருகன் பதில் ஏதும் செல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்
பின்னர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதற்கிடையே பாலமுருகன் மாணவியின் உறவினர்கள் சிலர் தன்னை தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் பாலமுருகனை கண்காணித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ளது நல்லனம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இளம்பிள்ளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் போதும் நல்லனம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவர் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்து தெரிவித்து வந்தார்.
ஆனாலும் பாலமுருகன் விடாமல் பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். இதனாம் மனம் உடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பாலமுருகன் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டதுடன் அவரை கண்டித்தனர். அப்போது பாலமுருகன் பதில் ஏதும் செல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்
பின்னர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதற்கிடையே பாலமுருகன் மாணவியின் உறவினர்கள் சிலர் தன்னை தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் பாலமுருகனை கண்காணித்து வருகிறார்கள்.