செய்திகள்
கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்பாட்டம்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியை கண்டித்து கோவில்பட்டியில் நகர, ஒன்றிய பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
பயணியர் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வேல்ராஜா, ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கிறிஸ்து தாஸ்காந்தியை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் போஸ், ஒன்றிய செயலாளர் ராம்கி, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பாலு, மாவட்ட இளைஞரணி தலைவர் மாரிச்செல்வம், ஒன்றியப் பொதுச் செயலாளர்கள் குருசாமி, மாரிமுத்து, நகரச் செயலாளர்கள் தினேஷ்குமார், பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர இளைஞரணி தலைவர் காளிதாசன், செயலாளர் வேல்மகாராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.