செய்திகள்

இடைத்தேர்தலில் கொங்குநாடு மக்கள் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு

Published On 2016-10-21 08:44 GMT   |   Update On 2016-10-21 08:43 GMT
இடைத்தேர்தலில் கொங்குநாடு மக்கள் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
சென்னை:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற இடைத் தேர்தலில் தமிழகத்தில் வலிமையாக உள்ள பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மூன்று தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற 3 தொகுதிகளிலும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் கொங்கு நாடு மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர களப்பணியாற்றி தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க.விற்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்ய இருக்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News