செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.