செய்திகள்

பர்கூரில் குளிர்பதன பெட்டி வெடித்து சிதறியது: ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Published On 2016-09-30 17:38 GMT   |   Update On 2016-09-30 17:38 GMT
பர்கூரில் குளிர்பதன பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பர்கூர்:

பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியவாணி (50), மகள் சுபி (26). இவர்கள் பர்கூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சத்தியவாணி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குளிர்பதனபெட்டி (ப்ரிட்ஜ்) வெடித்து சிதறியது.

இதில், வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சம் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Similar News