செய்திகள்

நொய்யல் அருகே வைக்கோல் போரில் தீ விபத்து

Published On 2016-09-29 14:25 GMT   |   Update On 2016-09-29 14:25 GMT
நொய்யல் அருகே வீட்டின் அருகே மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின.

நொய்யல்:

கரூர் மாவட்டம், நொய்யல் புதுகுறுக்குபாளையத்தை சேர்ந்தவர் தங்கேவல் (வயது55) இவர் வீட்டின் அருகே மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வைக்கோல் போர் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.

இது குறித்து தங்கவேல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியன் தலைமையில் ஜெர்மையா, சீரங்கன், கலைச்செல்வன், நடராஜன், இராதாகிருஷ்ணன், கார்த்தி கேயன், செல்வம், ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகிலிருந்த வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின.

Similar News