செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 2-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: கலெக்டர் தகவல்

Published On 2016-09-29 09:59 GMT   |   Update On 2016-09-29 09:59 GMT
வருகிற அக்டோபர் 2-ந்தேதி அன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

வருகிற அக்டோபர் 2-ந்தேதி அன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News