செய்திகள்

கொருக்குப்பேட்டையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

Published On 2016-09-27 08:50 GMT   |   Update On 2016-09-27 08:50 GMT
கொருக்குப்பேட்டையில் கார்-மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை பாரதி நகர் 32-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி (19). இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் சரவணன்.

நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கொருக்குபேட்டையில் இருந்து பாரிமுனை நோக்கி சென்றனர். கொருக்குப்பேட்டை மினாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் மாடசாமி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காரை ஒட்டி வந்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் சந்தை கைது செய்தனர்.

Similar News