செய்திகள்
தாலுகா அலுவலக பெண் ஊழியருக்கு மிரட்டல்
ராமநாதபுரம் அருகே தாலுகா அலுவலக பெண் ஊழியருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது40). மாற்றுத்திறனாளியான இவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் ஒரு ஆட்டோவில் அலுவலகத்திற்கு வந்து சென்றுவரும் போது இந்திராநகரை சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கலா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது40). மாற்றுத்திறனாளியான இவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் ஒரு ஆட்டோவில் அலுவலகத்திற்கு வந்து சென்றுவரும் போது இந்திராநகரை சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கலா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.