செய்திகள்

திருச்சிற்றம்பலம் அருகே தீயில் கருகிய பெண் பலி

Published On 2016-09-25 14:54 GMT   |   Update On 2016-09-25 14:54 GMT
திருச்சிற்றம்பலம் அருகே அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருந்த போது தீயில் கருகி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சிற்றம்பலம்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுக்கா, கருக்காகுறிச்சி அருகே உள்ள நல்லாண்டர்கொல்லைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மேல ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சுரேஷ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில், பிரசவத்திற்காக மேலஒட்டங்காட்டில் தங்கியிருந்த வீரம்மாள்(29) கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சம்பவத்தன்று தனது குழந்தைக்கு, வீரம்மாள் அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ உடலில் பரவியதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனையிலும் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வீரம்மாள் இறந்தார்.

இதுகுறித்து வீரம்மாளின் தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசுமதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

திருமணம் நடந்து ஒன்னரை வருடங்களே ஆவதால், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் விசாரணை நடத்த உள்ளார்.

Similar News