காலாப்பட்டில் ஆம்லெட் தர மறுத்ததால் ஓட்டல் சூறை: 3 வாலிபர்கள் கைது
காலாப்பட்டு:
புதுவை காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல்கலைக்கழகம் எதிரே தனியார் ஓட்டல் உள்ளது. நேற்று இரவு இந்த ஓட்டலுக்கு சின்னகாலாப்பட்டை சேர்ந்த எழில்வண்ணன் (வயது25), சதீஷ் (24), அரவிந்த் (25) ஆகியோர் சாப்பிட சென்றனர். 3 பேரும் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் ஆம்லெட் தயார் செய்து கொடுக்கும்படி கூறினார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் முட்டை இல்லாததால் ஆம்லெட் செய்து தர இயலாது என மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் முட்டை இல்லாமல் எதற்கு ஓட்டல் வைத்து நடத்துகிறீர்கள் என கூறி ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் முத்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து ஓட்டலை சூறையாடிய எழில்வண்ணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.