செய்திகள்
நெல்லை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
நெல்லை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சத்திய சுரேஷ். இவர் நெல்லை சந்திப்பில் ஒரு சுவீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள்(வயது 28). இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 31ந்தேதி இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உண்டானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கியம்மாள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இசக்கியம்மாள் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சத்திய சுரேஷ். இவர் நெல்லை சந்திப்பில் ஒரு சுவீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள்(வயது 28). இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 31ந்தேதி இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உண்டானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கியம்மாள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இசக்கியம்மாள் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.