செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-08 10:35 GMT   |   Update On 2016-08-08 10:35 GMT
பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு திருமாவளவனை அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓமலூர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப் பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு திருமாவளவனை அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ச்சுணன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருப்பாளர் வேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் பரமேஸ்வரன், தாட்ராவூர் பரேமஷ்வரன், முரளி, முருகேசன், கர்ணன், சிம்பு பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News