செய்திகள்

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2016-06-16 12:17 GMT   |   Update On 2016-06-16 12:17 GMT
சிவகிரி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகிரி:

நெல்லையை அடுத்த சிவகிரி அருகே உள்ள கொத்தாடை பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி வசந்தா (வயது33). இவர்களுக்கு தாரணி என்ற மகளும், யோகேஷ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக வசந்தா மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபாக இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News