உள்ளூர் செய்திகள்

சோழவரம்-பூண்டி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

Published On 2023-11-17 06:59 GMT   |   Update On 2023-11-17 06:59 GMT
  • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது.
  • மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

பூண்டி, சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, வேளாண் விஞ்ஞானி சிவகாமி, வேளாண்மை அலுவலர் செல்வகுமார் பங்கேற்றனர். முகாமில் விவசாயிகள் ஜானகிராமன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விஜயகுமார், தாரா, தேவராஜ், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News