உள்ளூர் செய்திகள்

களக்காடு, பணகுடியில் 2 வாலிபர்கள் தற்கொலை

Published On 2022-06-06 09:30 GMT   |   Update On 2022-06-06 09:30 GMT
  • மெடிக்கல் வைத்ததில் பாலசுப்பிரமணியனுக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த சுப ஆனந்த் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

களக்காடு அருகே உள்ள படலையர்குளம் அம்மன் கோவில் நடு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. வைஷ்ணவி மருந்தாளுனருக்கு படித்துள்ளார். இதனால் அவரது கிராமத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுப்பிரமணியம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மெடிக்கல் வைத்ததில் பாலசுப்பிரமணியனுக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழவூர் அருகே உள்ள வண்ணார் குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப ஆனந்த் (வயது 20). இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்தார்.

சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த சுப ஆனந்த் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பழவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சுப ஆனந்த் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News