உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே குடிப்பழக்கத்தால் 2 வாலிபர்கள் சாவு

Published On 2022-06-28 05:06 GMT   |   Update On 2022-06-28 05:06 GMT
  • தேனி அருகே குடிப்பழக்கத்தால் வாலிபர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டும், விஷம்குடித்தும் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா(31). இறைச்சி கடையில் வேலைபார்த்து வந்தார். அதிகளவு குடிப்பழக்கத்திற்கு அடிைமயானதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று மதுகுடித்து வீட்டிற்கு வந்த ராஜா 3 முறை வாந்தி எடுத்தார். பின்னர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் வெங்கலாநகர் முதல்தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே இவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

மனமுடைந்த அன்பழகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News