உள்ளூர் செய்திகள்

முன் விரோத தகராறில் வீடு,கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-10-01 08:16 GMT   |   Update On 2022-10-01 08:16 GMT
  • ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

விழுப்புரம்:

திண்டிவனம் ரோசனை முனியன் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (எ) பிரவீன் (வயது 29) அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (எ) மணிமாறன். இவர்கள் இருவருக்கும் ரோசனை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் இடையே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 28-ம் தேதி ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.

இதனால் ராஜ்குமார் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா பெட்ரோல் குண்டு வீச்சில் கைது செய்ய ப்பட்ட பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடை த்தனர்.

Tags:    

Similar News