உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

வத்தலக்குண்டுவில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2022-07-21 07:21 GMT   |   Update On 2022-07-21 07:21 GMT
  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெரும்பாறையை சேர்ந்த பாண்டியன் (வயது 49) என்பவர் காரில் கடைகளுக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்துவந்தார். உசிலம்பட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரை சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையிலான போலீசார் கைது செய்து 1230 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூ.1900 ரொக்கப்பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தம்சிங் (24) என்பவர் புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்த போது அவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News