உத்தமபாளையம் அருகே கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் மாயம்
- கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் மாயமாகினர்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் எஸ்.ஏ.பி பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வினோத்குமார்(28). இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரை யாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றஅவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை தேடி வருகின்றனர்.
ராயப்பன்பட்டி காம ராஜர் காலனியை சேர்ந்த வர் மகேஸ்வரன் மகள் சரண்யா(16). இவரது தாய் கூலிவேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீடு திரும்பிய போது சரண்யா மாயமாகிஇருந்தார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.