உள்ளூர் செய்திகள்
தேனி அருகே வங்கி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
- விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது37). இவர் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து அங்குள்ள ஏலத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார்.
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் இருந்த ஸ்ரீகாந்த் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் ஜோசப்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவரது 5 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 2 மகன்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேேய இருந்தனர். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.