உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

Published On 2022-07-09 04:54 GMT   |   Update On 2022-07-09 04:54 GMT
  • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம்:

போடி எடமுத்துநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்ப–ட்டதால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு கழிவறை ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்ததால் அவரது தாயார் கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த கருணாநிதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News