உள்ளூர் செய்திகள்
- அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வட்டாளி கொட்டாய் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சென்றாயன் (53) மல்லன் (55) ஆகிய இருவரும் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று மிட்டாநூலஹள்ளி, வட்டாளி கொட்டாய் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சென்றாயன் (53) மல்லன் (55) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.