உள்ளூர் செய்திகள்

சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் வேன்.

திருமண விழாவிற்கு சென்றபோது வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 13 பேர் காயம்

Published On 2022-09-12 09:57 GMT   |   Update On 2022-09-12 09:57 GMT
  • திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.
  • வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோ ணம் காடு வெட்டி விடுதியை சேர்ந்த 13 பேர் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாடகை வேனில் காலை 9 மணி யளவில் திருவோணத்திற்கு புறப்பட்டனர்.

வேன் திருவோணம் பகுதிய அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.

ஆனால் வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

வேன் கவிழ்ந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.

இதையடுத்து காயமடை ந்த 13 பேரையும் திருவோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பான காலை வேளையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News