செய்திகள்
கடையில் துணிக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரித்த சைதை துரைசாமி

கடையில் துணிக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரித்த சைதை துரைசாமி

Published On 2021-03-31 02:54 GMT   |   Update On 2021-03-31 02:54 GMT
சைதாப்பேட்டை தொகுதியில் கடையில் துணிக்கு இஸ்திரி செய்து சைதை துரைசாமி வாக்கு சேகரித்தார்.
சென்னை:

சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரு, தெருவாக, வீடு, வீடாக சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில், சாலையோர டீ கடைகளில் டீ குடித்தும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டியும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அந்த வகையில், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கன்னிகாபுரம் பகுதி முழுவதும் நேற்று இரட்டை இலை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு வெற்றிச்செல்வன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

இதேபோன்று, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி பகுதியிலும் நேற்று சைதை துரைசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வேளச்சேரி காந்தி தெருவில் உள்ள துணி சலவை செய்யும் கடைக்கு சென்ற சைதை துரைசாமி துணிக்கு இஸ்திரி செய்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

சைதை துரைசாமியுடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News