செய்திகள்
எல்கே சுதீஷ்

எல்கே சுதீஷ் 26-ந் தேதி திருத்தணியில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

Published On 2021-03-22 09:56 GMT   |   Update On 2021-03-22 09:56 GMT
தேமுதிக துணைச் செயலாளர் எல்கே சுதீஷ், 26-ந் தேதி திருத்தணியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

சென்னை:

தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீசுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான தொற்று என்பதால், அடுத்த சில நாட்களில் குணமடைந்து விடுவார் என கூறப்படுகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளதால், அவர் அந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 26-ந் தேதி திருத்தணியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதையடுத்து, தொடர்ந்து 27-ல் சென்னை தெற்கு, செங்கல்பட்டு, 28-ல் திருவண்ணாமலை, தருமபுரி, 29-ல் மேட்டூர், சேலம் 30-ல் திண்டுக்கல், கோவை, மதுரை, 31-ல் தூத்துக்குடி, விருதுநகர், ஏப்.1-ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, 2-ல் கரூர், பெரம்பலூர், 3-ல் விருத்தாச்சலம், பண்ருட்டி 4-ம் தேதி கள்ளக்குறிச்சி, கடலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News