லைஃப்ஸ்டைல்
குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் தீர செய்ய வேண்டியவை

குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் தீர செய்ய வேண்டியவை

Published On 2019-11-01 05:08 GMT   |   Update On 2019-11-01 05:08 GMT
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமப் பிரச்னைகளை உண்டாக்குகிறது. போதிய ஈரப்பதம் இல்லாத போது சருமமும் உலர்ந்து பொலிவிழக்கிறது.
குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சில உடல் நலக் குறைபாடுகளுடன் சருமப் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. உலர்ந்த சருமம் ஈரப்பதத்துக்காக ஏங்குகிறது. போதிய ஈரப்பதம் இல்லாத போது சருமமும் உலர்ந்து பொலிவிழக்கிறது.

வெயில் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் பலர் குளிர் காலத்தில் சுடுதண்ணீர்க் குளியலுக்கு மாறி விடுகின்றனர். இதனால் மேலும் சருமம் வறண்டு உயிரோட்டமின்றி சொரசொரப்பாக மாறி விடுகிறது. உலர்ந்த சருமத்தைக் கண்டு கொள்ளாமல் விடுவது நமது அழகைக் கண்டிப்பாக பாதிக்கும். இக்காலகட்டத்தில் சருமம் உலர்ந்து முதிர்ச்சியான தோற்றம் தரும். சருமம் கருப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. சருமத்தில் உள்ள செல்கள் அதிகளவில் இறப்பதால் இப்பிரச்னை ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான எண்ணெய் பிசுபிசுப்பு சருமம் உள்ளவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமப் பிரச்னைகள் கூடும். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்று யோசிக்கும் பெண்களுக்கு வாய்த்திருக்கும் ஒரு மேஜிக் தான் ஃபேஷியல். குளிர்காலம் ஏற்படுத்தும் அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வு இதில் உள்ளது.

ஃபேஷியல் செய்து கொள்ளும் போது சருமம் ஆழமாகத் தூய்மை செய்யப்படுகிறது. இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. சருமத்தை இயற்கையாகப் புதுப்பிக்கச் செய்கிறது. முகத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஃபிரஷ்ஷாக வைக்கிறது. ஃபேஷியலில் செல் உதிர்ப்புப் பொருட்களான எக்ஸ்போலியன்ட்ஸ், மாஸ்குகள், பீல்ஸ் ஆகியவை இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகின்றன. ரத்த
ஓட்டத்தை மேலும் சிறப்பாக ஊக்கப்படுத்துகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றிப் புத்துயிரூட்டுகிறது.

ஃபேஷியலில் நிறைய வகைகள் இருந்தாலும் ஆழமாக சுத்தப்படுத்தி இறந்த செல்களை அகற்றும் தன்மை உடையதே இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது. சருமத்துவாரங்களில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு இல்லாமல், ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. இந்தக் காலகட்டத்துக்கு பர்ஃபெக்ட் ஒயிட் ஆல்டைம் ஃபேஷியலை அனைவரும் விரும்புகின்றனர்.

டபுள் பீல் அப் மாஸ்க்கைப் பயன்படுத்துவது கூடுதல் ஈரப்பதத்தை சருமத்துக்கு வழங்குகிறது. இந்த ஃபேஷியலில் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதோடு, பளிச்சென்ற, பட்டுப் போன்ற மென்மை அளிக்கிறது.
Tags:    

Similar News