லைஃப்ஸ்டைல்
சாதத்திற்கு அருமையான தக்காளி - பூண்டு குழம்பு
சாதம், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி - பூண்டு குழம்பு. இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டுத் தக்காளி - 2,
பெங்களூர் தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2,
பூண்டு - 10 பல்,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நாட்டு தக்காளி, பெங்களூர் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தீயைக் குறைத்து, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] தனியாத்தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு [பாட்டி மசாலா] சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.